சென்னையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
இதுகுறித்து அவரது மகள் தயா பிரசாத் பிரபாகர் கூறியதாவது:- என் அம்மா ஒரு பாடகி, எல்.எல்.பி மற்றும் பி.எச்.டி ஆகியவற்றை ஒரே நேரத்தில் படித்து வருகிறார், இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. தூக்கமின்மையை குணப்படுத்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத்திரையை பரிந்துரைத்தனர்.
தூக்கம் வராமல் அதிக மாத்திரை எடுத்துக் கொண்டதால் அம்மாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இது தற்கொலை முயற்சி அல்ல. என் அம்மாவும் அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குடும்பத்தில் எல்லோரும் மிகவும் நலமாக இருக்கிறார்கள். தயவுசெய்து எங்கள் விஷயங்களை கையாள வேண்டாம்.
The post பாடகி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை- மகள் விளக்கம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

