இந்த நிலையில், செய்தியாளர்களுடன் திங்கள்கிழமை பேசிய பாஜக எம்எல்ஏ பசங்கெளடா பாட்டீல், தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர்களின் முழுப் பட்டியலும் என்னிடம் இருக்கிறது, சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதனை வெளியிடுவேன் என்றார்.
மேலும், ரன்யா ராவ் குறித்து இழிவான கருத்துகளை செய்தியாளர்களின் முன்னிலையில் பேசினார்.
இந்த நிலையில், பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ரன்யா ராவ் சமூகத்தில் மரியாதை மிக்கவர், அவரைப் பற்றி ஆபாசமான கருத்துகள் பேசியதாக பாஜக எம்எல்ஏ மீது அகுலா அனுராதா என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பசங்கெளடா பாட்டீல் மீது பெங்களூரு ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

