• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ,உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, ஷாசாத் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் சென்று அழகுசாதன பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றை பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்கு கடத்தி வந்துள்ளார். இந்த கடத்தலின்போது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் ஷாசாத்திற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் உள்ள ராணுவ தளங்கள் உள்பட முக்கிய இடங்கள் குறித்த உளவு தகவல்களை ஷாசாத் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. க்கு அனுப்பியுள்ளார். மேலும், உத்தரபிரதேசத்தில் இருந்து மேலும் பலரையும் ஐ.எஸ்.ஐ.யில் பணியாற்ற ஷாசாத் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், ஷாசாத்தை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷாசாத்திற்கு பாகிஸ்தான் விசாவை ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பினர் எடுத்துக்கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

அதேவேளை, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொராதாபாத்தில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியான ஷாசாத்தை உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்தது. கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குச் சென்று அழகுசாதனப் பொருட்கள், உடைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் சட்டவிரோதமாக கடத்தி வந்தார். இதன் போர்வையில், அவர் பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐ-க்காக பணியாற்றினார். ஷாசாத் ஐஎஸ்ஐ முகவர்களுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார்.



Read More

Previous Post

சண்டை நிறுத்தம்; அமெரிக்கா தலையீடு இல்லை – வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

Next Post

யுத்தத்தில் ஈடுபட்டமையின் எதிரொலி : மகளுக்காக புலம்பி திரியும் சவேந்திர சில்வா

Next Post
யுத்தத்தில் ஈடுபட்டமையின் எதிரொலி : மகளுக்காக புலம்பி திரியும் சவேந்திர சில்வா

யுத்தத்தில் ஈடுபட்டமையின் எதிரொலி : மகளுக்காக புலம்பி திரியும் சவேந்திர சில்வா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin