புதிய இணைப்பு
ஜாவா கடற்பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை 103 பயணிகளை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 140 பயணிகள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று இன்று (13) காலை காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திடீரென நிலவிய மோசமான வானிலை காரணமாக குறித்த கப்பலின் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, காணாமல் போன கப்பலைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடல்வழிப் போக்குவரத்து
சுரபாயா நகரத்திலிருந்து பன்ஜார்மாசின் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: firstpost
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில், கடல்வழிப் போக்குவரத்து முக்கியப் பயண முறையாக விளங்குகிறது.
பாதுகாப்பு தரநிலைகள்
இந்நிலையில், விமானப் பயணத்திற்கான செலவு அதிகம் என்பதால், பொதுமக்கள் பெரும்பாலானோர் குறைந்த கட்டணத்திலான கடல்வழிப் பயணங்களையே தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகச் செயல்படுத்தப்படாததால், இத்தகைய ஆபத்தான விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

