நீதிமன்ற வளாகத்திலிருந்து இந்தப் போதைப்பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வனாத்தவில்லுவ லாக்தோட்டவத்தை எரியூட்டும் நிலையத்தில் வைத்து அழிக்கப்படும்.
99 கிலோ 478 கிராம் ஹெரோய்ன் உட்பட சுமார் 100 கிலோகிராம் போதைப்பொருட்கள், இன்று சனிக்கிழமை (25) அழிக்கப்படவுள்ளன.
நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தப் போதைப்பொருள் கையிருப்பு அழிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போதைப்பொருட்கள் புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள லாக்தோட்டவத்தை எரியூட்டும் நிலையத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குகள் முடிக்கப்பட்ட 99 கிலோ 478 கிராம் ஹெரோய்ன் மற்றும் தீவு முழுவதும் உள்ள பிற நீதிமன்றங்களால் அழிக்க உத்தரவிடப்பட்டு, தற்போது அரசு பகுப்பாய்வுத் துறையிடம் உள்ள போதைப்பொருட்களும் இதில் அடங்கும்.
இன்று காலை மாரவில நீதிமன்ற வளாகத்திலிருந்து இந்தப் போதைப்பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வனாத்தவில்லுவ லாக்தோட்டவத்தை எரியூட்டும் நிலையத்தில் வைத்து அழிக்கப்படும்.

