ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கின் போதே ட்ரம்பைக் கொல்லுமாறு கோரி காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளைக் (Banners) சுட்டிக்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலக்குப் பட்டியல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன்.
நாம் இத்தகையதொரு சூழலையே எதிர்கொண்டுள்ளோம்.

ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்கள் இதற்கு முன் பார்த்திராத அளவிலான மட்டங்களில் மிகக் கொடூரமாக அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்துமாறு நான் அறிவுறுத்தல்களை விட்டுச் சென்றுள்ளேன்.
தெஹ்ரான் (ஈரான்) தான் இறக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விரும்புகின்றது.
நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

