ஹோர்முஸ் நீரிணையை அச்சுறுத்துவதன் மூலம் வரவிருக்கும் நவம்பர் மாத காங்கிரஸ் இடைத்தேர்தலில் தானும் தனது குடியரசுக் கட்சியும் வெற்றி பெறுவதைப் பாதிப்பதற்கு ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தேர்தல்களில் ஈரான் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை நிராகரித்துள்ள ட்ரம்ப், நான் சரியானதை மட்டுமே செய்யப் போகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இந்தத் தேர்தலை ஈரான் மீதான போர் தொடர்பான விவகாரத்துடன் தொடர்புபடுத்தி என்னால் யோசிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
பெரும் அதிருப்தி
அத்தோடு மக்கள் எனது நடவடிக்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றே நான் நினைக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர், அமெரிக்காவிற்குள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாகப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து வருவதும் அங்குப் பெரும் அசௌகரியத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

