Last Updated:
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது தோனி 9ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும் என முன்னாள் இந்திய அணி வீரர் சஞ்சய் மஞ்சரேகர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில், 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், தோனி 9ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது மிகவும் விமர்சிக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேனான சஞ்சய் மஞ்சரேகர் கூறியபோது, “தோனி தற்போது ஒரு பேட்ஸ்மேனாக அல்லாமல், அணிக்கு ஒரு பிராண்ட் தேவை என்பதைப்போல விளையாடுகிறார். அவர் இருக்கிறார் என்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் எடுக்க முடியாத நிலை உள்ளது.
ஆனால் அவர் 9ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடுகிறார். இதனால் தோனியை சிஎஸ்கே நிர்வாகம் சரியாக பயன்படுத்துவதில்லை என்று நினைக்கிறேன். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனும் இல்லாமல், தோனியும் 9ஆவது வீராராக களமிறங்குவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிக்க: 9-வது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்குவது ஏன்? – பயிற்சியாளர் ஃபிளமிங் பகிர்ந்த தகவல்!
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, ஜியோஹாட்ஸ்டாரில் தோனி கொடுத்த ஒரு பேட்டியில், ருதுராஜ் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என தோனி தெரிவித்திருந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
March 31, 2025 5:04 PM IST


