தெகிவளை, சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் வீட்டில் வசித்து வந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும், படுகாயமடைந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

