Last Updated:
துபாயில் வசிப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சுற்றுலா அழைத்து வந்தால் சலுகைகளை பெறும் வகையில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாயில் வசிப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சுற்றுலா அழைத்து வந்தால் சலுகைகளை பெறும் வகையில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், ’துபாய் அழைப்பு’ என்ற விளம்பர தூதர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி துபாயில் வசிப்பவர்கள், ஜூலை 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை துபாய்க்கு சுற்றுலா வருவதற்காக தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், விருந்தினர்களுக்கு ஹோட்டலில் தங்குதல், உள்ளூர் சுற்றுலா இடங்களுக்கான டிக்கெட்டுகள் உள்ளிட்டவை வெகுமதிகளாக வழங்கப்படும் என்றும் இந்த சலுகைகள் டிசம்பர் 31 ஆம் தேதி செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் எமிரேட்ஸின் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்படும் விருந்தினர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவராக இருக்கக் கூடாது என்றும் ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் வரை பரிந்துரைக்கலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போரால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில் துபாய் அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
துபாயில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் இந்த சுற்றுலா திட்டம் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரள மக்கள் மத்தியிலும் இதற்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. இந்தியர்கள் உட்பட ஆசிய மக்களை ஈர்க்கும் வகையில் இந்த சுற்றுலா திட்டம் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஜாக்பாட்… ரூ. 78 ஆயிரம் பரிசு உண்டு! – உறவினர்களை அழைத்தால் சிறப்பு வெகுமதி


