பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, தனது 94வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித், சௌகார் ஜானகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனாம்பேட்டை இல்லத்திற்கு வந்திருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி செலுத்த வந்த நடிகை ஷாலினி, சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்து, சௌகார் ஜானகியின் பேத்திகளைக் கட்டியணைத்து முத்தமிட்டு ஆறுதல் கூறினார்.
ஷாலினி சிரித்த முகத்துடன் வந்த காட்சியை பார்த்த சில நெட்டிசன்கள், துக்க வீட்டிற்கு வரும்போது கூடவா இப்படிச் சிரித்துக்கொண்டே வருவார்கள்? எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விபரம் கூடத் தெரியாதா? எனக் காட்டமாகக் கருத்துக்களைப் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர். R

