• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

GenevaTimes by GenevaTimes
December 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, வானிலை நிலையம் தலைநகரில் ‘ஆரஞ்சு‘ எச்சரிக்கை வெளியிட்டது.

தில்லி என்சிஆரில் அதிகாலை 2.30 மணியளவில் மழை தொடங்கியதாக வானிலை அலுவலகம் தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறை தரவுகளின்படி, தேசியத் தலைநகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் உள்ள ஆய்வகத்தில் காலை 11.30 மணி வரை 9.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் 8.4 மி.மீ., லோதி சாலையில் 10.8 மி.மீ., ரிட்ஜில் 9 மி.மீ., தில்லி பல்கலைக்கழகம் பகுதியில் 11 மி.மீ. மற்றும் பூசாவில் 9.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நரேத்தில் அதிகபட்சமாக பாலத்தில் 11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று நஜஃப்கரில் 5.5 மி.மீ., ஆயாநகரில் 4.9 மி.மீ., லோதி ரோடில் 6.8 மி.மீ., நரேலாவில் 1 மி.மீ., ரிட்ஜில் 2 மி.மீ., சஃப்தா்ஜங்கில் 9 மி.மீ., பீதம்புராவில் 2.5 மி.மீ., பிரகதிமைதானில் 4.3 மி.மீ., பூசாவில் 5.5 மி.மீ., ராஜ்காட்டில் 4.3 மி.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு தில்லி, மத்திய தில்லி மற்றும் வடக்கு தில்லியின் பல பகுதிகளில் மழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேற்கு திசையில் இருந்து கிளம்பும் ஒரு தீவிரமான இடையூறு காரணமாக என்சிஆா்பகுதிகள் உள்பட வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்துவதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனா். நாள் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணித்திருந்த வானிலை அலுவலகம், ஆரஞ்சு (தயாராக இருங்கள்) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வெப்பநிலை: தேசியத் தலைநகரில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.2 டிகிரி உயா்ந்து 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி குறைந்து 14.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 372 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு 24 மணி நேர காற்று தர குறியீடு 345 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

இதன்படி, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், மந்திா் மாா்க், பூசா, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, ராமகிருஷ்ணாபுரம் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், நொய்டா செக்டாா் 125, சாந்தினி சௌக், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு குறைவாக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழைக்கு வாய்ப்பு: தென்கிழக்கு திசையிலிருந்து காலை நேரங்களில் மணிக்கு 4 கி.மீ.க்கும் குறைவான வேகத்தில் பிரதான மேற்பரப்பு காற்று வீச வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் மேலோட்டமான மூடுபனி இருக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு காற்றின் வேகம் அதிகரித்து பிற்பகலில் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ.க்கும் குறைவாக இருக்கும். பகலில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணித்துள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || அஸ்வெசும நிலுவைத்தொகையை வழங்கத் தீர்மானம்

Next Post

மாரான்-குவாந்தான் சாலையில் டிரெய்லர் கவிழ்ந்ததில் கடும்போக்குவரத்து நெரிசல்! | Makkal Osai

Next Post
மாரான்-குவாந்தான் சாலையில் டிரெய்லர் கவிழ்ந்ததில் கடும்போக்குவரத்து நெரிசல்! | Makkal Osai

மாரான்-குவாந்தான் சாலையில் டிரெய்லர் கவிழ்ந்ததில் கடும்போக்குவரத்து நெரிசல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin