Last Updated:
ராஜ்தானி விரைவு ரயிலில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம் நிலவியது.
திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம் நிலவியது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கி ராஜ்தானி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயிலின் B1 பெட்டியில் திடீரென புகை எழுந்தது.
இதனை கவனித்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு அந்த பெட்டியில் இருந்த 68 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்க தீப்பிடித்த பெட்டி ரயிலில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அதன்பின் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
#WATCH | Madhya Pradesh | Fire breaks out in B-1 coach (near SLR end) of Train No. 12431 Thiruvananthapuram–Hazrat Nizamuddin Rajdhani Express between Luni Richha (LNR) and Vikramgarh Alot (VMA) stations. All passengers of the affected coach were safely deboarded and no injury or… https://t.co/S0JK2JT9xw pic.twitter.com/6n7gVqAXOj
— ANI (@ANI) May 17, 2026
தீப்பிடித்த பெட்டியில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்து வரும் கோட்டா ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
திருவனந்தபுரம் – டெல்லி ராஜ்தானி ரயிலில் திடீர் தீ விபத்து.. பயணிகள் மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்!


