Last Updated:
ரயில் வருவதற்காக சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், தண்டவாளம் மீது நின்ற பயணிகள் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதால் அதிர்ச்சி.
நேற்று (மே 17) மதியம் பாங்காக்கின் மக்காசன் ரயில்வே கிராசிங் வழியாக பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். 3.35 மணியளவில் ரயில் வருவதற்காக சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தண்டவாளத்தில் நின்ற பேருந்து மற்றும் பிற வாகனங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில், கண்டெய்னர்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதி இழுத்துச் சென்றதில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். பேருந்து மற்றும் மற்ற வாகனங்களில் இருந்த 32 பேர் காயம் அடைந்தனர். சரக்கு ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததால் பிரேக் பிடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
May 17, 2026 10:52 AM IST
தாய்லாந்து: அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் மீது மோதிய சரக்கு ரயில்.. தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்!


