அமெரிக்கா (USA) தனது சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது.
தாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்க ஈரானியப் படைகள் தயாராக இருப்பதாகவும் தங்களது பதிலடியைக் கண்டு அமெரிக்கா “ஆச்சரியப்படும்” என்றும் எச்சரித்த ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து ஈரான் இதனைத் தெரிவித்துள்ளது.
கடுமையான கருத்துப் பரிமாற்றம்
தெஹ்ரானின் இந்த எச்சரிக்கையால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இந்தக் கடுமையான கருத்துப் பரிமாற்றம், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முன்னேற்றத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை தனது நிலப்பரப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக 90% யுரேனியத்தைச் செறிவூட்டுவோம் என்று ஈரான் செவ்வாயன்று எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

