• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தனியார் சுகாதார நிலையங்கள் 2025 இல் மருந்தின் விலையைக் காட்ட வேண்டும் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
தனியார் சுகாதார நிலையங்கள் 2025 இல் மருந்தின் விலையைக் காட்ட வேண்டும் – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விலை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காகத் தனியார் மருத்துவ நிறுவனங்களில் மருந்து விலைகளைக் காட்சிப்படுத்துவதை அரசாங்கம் கட்டாயப்படுத்தும்.

விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டம் 2011ன் கீழ் இம்முயற்சி செயல்படுத்தப்படும் என்பதால், அடுத்த ஆண்டு முதல் இந்த விஷயம் அமலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் சுல்கேப்ளி  அஹ்மட் தெரிவித்தார்.

“இந்த வழியில், காப்பீட்டு உரிமைகோரல்களில் உள்ள மருந்து கட்டணங்களைச் சரிபார்க்க முடியும், இதனால் மருந்துகளின் விலை காட்டப்பட்ட விலையைவிட அதிகமாக இருக்காது மற்றும் மருந்துக் கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் விநியோக மசோதா (பட்ஜெட்) 2025 பற்றிய விவாதத்தை முடித்தபோது கூறினார்.

1998 இல் இயற்றப்பட்ட தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம், பதினான்காம் அட்டவணை, மற்ற தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் ஆணை (திருத்தம் 2013), 2006 முதல் நடைமுறையில் உள்ளது என்பதின் கீழ் தொழில்முறை கட்டணங்களைத் தவிர, தனியார் சுகாதார வசதிகள் செயல்படுத்தும் எந்தக் கட்டணத்தையும் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.

நிபுணர் சேவைகளைப் பற்றி மேலும் விவரித்த சுல்கேப்ளி, 2025 ஆம் ஆண்டில் 6,706 மருத்துவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க ரிம 156.6 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 142.3 மில்லியன் ரிங்கிட் உடன் ஒப்பிடும்போது வழங்கப்பட்ட ஒதுக்கீடு 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், இது 6,155 மருத்துவ அதிகாரிகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

முதுகலை மருத்துவ நிபுணர் பயிற்சிக்கான 1,650 இடங்கள் 2023 முதல் 150 ஆக உயர்ந்துள்ளதால், உயர்கல்வி அமைச்சகத்துடன் இணைந்து சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“2025 இல் (2024 இல் இருந்ததைப் போலவே) ஆண்டுக்கு 600 பயிற்சி இடங்களை வழங்குவதற்காகப் பேரலல் பாத்வே ஸ்பெஷலிஸ்ட் திட்டத்தை(Parallel Pathway specialist programme) ஸ்பான்சர் செய்ய மொத்தம் ரிம 10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை, 700 மருத்துவ அதிகாரிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 14 சிறப்புப் பிரிவுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

“மருத்துவச் சட்டம் 1971-க்கான புதிய திருத்தம், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும், மேலும் சிறப்புப் பயிற்சி சுற்றுச்சூழல் அமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்தும்,” என்று அவர் மேலும் கூறினார்.

புத்திசாலித்தனமான கூட்டாண்மை மற்றும் முழு அரசாங்க அணுகுமுறையுடன் பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்த, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரிம 25 மில்லியன் ஆரம்ப மூலதனத்துடன் RakanKKM முன்முயற்சியையும் அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது என்று சுல்கேப்ளி கூறினார்.

“RakanKKM அதிக முதலீட்டை ஈர்க்கும் மற்றும் சுகாதார அமைப்பில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட சுகாதார நிபுணர்களைத் தக்கவைக்கும். சைபர்ஜெயா மருத்துவமனை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சுகாதார அமைச்சக மருத்துவமனைகளுடன் இந்த முயற்சி தொடங்கும்,” என்றார்.

சர்க்கரை மீதான போர்

கூடுதலாக, பான விற்பனையாளர்களைச் சந்தையில் அதிக சர்க்கரை குறைந்த பானங்களை அறிமுகப்படுத்த ஊக்குவிக்க, சுகாதார அமைச்சகம் தற்போது அனைத்து வயதினருக்கும் தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் சுகாதார அமைப்பு மாற்றத்தைச் செயல்படுத்தி வருகிறது.

சர்க்கரை பானங்களுக்கான கலால் வரி விகிதம் ஜனவரி 1, 2025 முதல் லிட்டருக்கு 40 சென் என இரண்டு கட்டங்களாக அதிகரிக்கப்படும், இது சர்க்கரை மீதான போர் முயற்சியையும் உள்ளடக்கியது என்று சுல்கேப்ளி விளக்கினார்.

“தற்போதைய விலை லிட்டருக்கு 50 சென் (ஜனவரி 2024 முதல்) லிட்டருக்கு 90 சென்னாக அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார்.

மேலும், சுகாதார அமைச்சகம் ஹெல்தியர் சாய்ஸ் லோகோ (Healthier Choice Logo) திட்டத்தை வலுப்படுத்தி விரிவுபடுத்துகிறது, அக்டோபர் 2024 நிலவரப்படி மொத்தம் 791 தயாரிப்புகள் HCL அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

“இரவு சந்தைகளில் போபா டீ மற்றும் கலர் வாட்டர் விற்பனையைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, ​​பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவை அடிப்படையாகக் கொண்டு, ‘நியூட்ரி-கிரேடு’ என்ற புதிய கிரேடிங் லேபிளிங் முறையைச் சுகாதார அமைச்சகம் உருவாக்கி வருகிறது”.

“இந்த முறை பானத்திற்கு தயாராக இருக்கும் பொருட்கள் மற்றும் விற்பனை செய்யும் இடத்தில் தயாரிக்கப்பட்ட பானங்களுக்கும் பொருந்தும்,” என்று அவர் மேலும் கூறினார்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

சீனாவில் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டியதில் 35 பேர் பலி, 43 பேர் காயம் | 35 killed, 43 injured as man rams car into crowd in Chinese city

Next Post

பேஸ்புக் பதிவால் பங்களாதேஷில் ஏற்பட்ட பதற்றம்

Next Post
பேஸ்புக் பதிவால் பங்களாதேஷில் ஏற்பட்ட பதற்றம்

பேஸ்புக் பதிவால் பங்களாதேஷில் ஏற்பட்ட பதற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin