அமிருதசரஸ்: சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதல் தனக்கு அளிக்கப்பட்ட மதத் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
தனது தவறுகளுக்காக வருந்துவதாக எழுதப்பட்ட பதாகயை கழுத்தில் அணிந்துகொண்டு கையில் ஈட்டியை வைத்துகொண்டு பொற்கோவில் வாயிலில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால், சக்கர நாற்காலியில் வந்து பொற்கோவிலில் தண்டனையை ஏற்று சேவகராகப் பணியாற்றினார்.
சீக்கியர்களின் நம்பிக்கைபடி, தவறு செய்தவர்களுக்கு மத ரீதியாக வழங்கப்படும் தண்டனை சுக்பீர் சிங் பாதலுக்கு நேற்று பிறப்பிக்கப்பட்டது. சீக்கியா்களின் அதிகார பீடமான அகால் தக்த் திங்கள்கிழமை தண்டனை வழங்கிய நிலையில் அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக பஞ்சாபின் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில், சேவகராக தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதலுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

