மேலும், இந்த மோதலின் போது (OEF) பல அமெரிக்கப் போர் விமானங்களும் சேதமடைந்துள்ளன… அழிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் என்பது அமெரிக்காவின் ஒரு ராணுவ பிரிவாகும். இது தான் தற்போது ஈரான் மீது போர் தொடுத்துவரும் பிரிவு.
அராக்சி ஷேர் செய்திருக்கும் அறிக்கையில், அமெரிக்காவின் என்னென்ன போர் விமானங்கள் சேதமடைந்திருக்கின்றன என்பதும் இடம்பெற்றிருக்கிறது.

இந்த அறிக்கை குறித்து, “கட்டுக்கதை: ஈரான் ஆயுதமின்றி நிற்பதாகக் கூறுவது.
உண்மை: நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவ மையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. பல போர் விமானங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளன. (ஆதாரம்: பென்டகன்)
இது வெறும் தொடக்கம்தான்.
சரியான நேரத்தில் அனைத்து உண்மையையும் வெளிப்படுத்துவோம்.
ஈரானைப் பற்றிப் பொய்யான கதைகளைப் பரப்பியவர்களுக்கு, இதன் முடிவு நிச்சயம் இனிமையாக இருக்கப் போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார் அராக்சி.

