“அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகளை ஈரான் மீது வீசுவோம்” என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அமெரிக்கா – ஈரான் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே ஈரான் அணுசக்தி திட்டத்தின் மூலம் அணு ஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இதனை எதிர்க்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. அணுசக்தி திட்டத்தில் ஒரு ஒழுங்கு முறை வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

