பாதாள உலகக் குற்றவாளியான கனேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த உதவிய இஷார செவ்வந்தியை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பதில் காவல்துறை மா அதிபர் புத்திக மனதுங்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை
அவர் தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறை அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டும், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியும் கடல் வழிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் ஸ்ரீகாவல்துறை மா அதிபர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
காவல்துறை குழுக்கள்
கடந்த ஒரு வார காலமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை குழுக்கள் செவ்வந்தியை தேடி வருகின்ற நிலையைில் இதுவரை காவல்துறை கண்ணில் படாமல் அவர் தப்பி வருகிறார்.

சமகாலத்தில் காவல்துறையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படும் பெண்ணாக மாறியுள்ள செவ்வந்தியை பிடிக்க மக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

