இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பதிலளித்தனர். குறிப்பாக, அன்பில் மகேஷ் பேசும் போது, ‘கடந்த ஆட்சியில் தான் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும். இதுவரை 7 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இன்னும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அதிக நிதி ஒதுக்கி வருவதாகவும், அதிமுக ஆட்சியில் புதிதாக எதுவும் செய்யவில்லை என்றும், பள்ளி கல்வித்துறையில் அதிமுக விட்டுச் சென்ற பல பணிகளை நாங்கள் தான் செய்தோம் என்றும், அறிவித்து தொடங்காத பணிகளை கூட நாங்கள் தான் செய்தோம்’ என்று அன்பில் மகேஷ் பதிலளித்தார்.

