Last Updated:
Summer Drinks: தூத்துக்குடியில் இன்றளவும் நாம் பொங்கலுக்கு மட்டுமே பார்க்கும் செங்கரும்பில் தான் கரும்புச்சாறு எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.
என்னதான் கலர் கலராக பாட்டிலில் கூல்டிரிங்க்ஸ் கிடைத்தாலும் அடிக்கிற வெயிலுக்கு இளநீர் கடையையோ அல்லது கரும்புச்சாறு கடையையோ தான் மக்கள் முதலில் தேடுகின்றனர். இதனால் கோடைக்காலத்தில் இளநீர் மற்றும் கரும்புச்சாறு விற்பனை அமோகமாக இருக்கின்றது.
அந்தவகையில் தூத்துக்குடியிலும் பல இடங்களில் இளநீர் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் இளநீர், பொள்ளாச்சியிலிருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. மேலும், பல இடங்களிலும் சர்க்கரை ஆலைக்குப் பயிரிடும் ரக கரும்புகளில் கரும்புச்சாறு எடுத்து விற்பனை செய்யப்படும். ஆனால் தூத்துக்குடியில் இன்றளவும் நாம் பொங்கலுக்கு மட்டுமே பார்க்கும் செங்கரும்பில் தான் கரும்புச்சாறு எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு கரும்புச்சாறு எடுக்கப்பயன்படும் செங்கரும்பானது தேனி பகுதியிலிருந்து இங்குக் கொண்டு வரப்படுகிறது. இதனால் பொதுமக்களும் வெயிலுக்கு இதமாக கரும்புச்சாற்றை விரும்பி குடிக்கின்றனர்.
இதையும் படிங்க: Biryani Ice Cream: ஐஸ் பிரியாணி தெரியும்… பிரியாணில ஐஸ் தெரியுமா..? சம்மருக்கு சரவெடியா வந்த வெரைட்டிஸ்…
இது குறித்து வியாபாரி கூறுகையில், “வெயில் காலம் துவங்கி விட்டதால் இளநீர் மற்றும் கரும்புச்சாறு விற்பனை அதிகளவில் உள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் இளநீர் மற்றும் கரும்பு பொள்ளாச்சி மற்றும் தேனி மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. ஓர் இளநீர் 70 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது இருப்பினும் மக்கள் விரும்பி வாங்கி பருகுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
April 14, 2025 11:11 AM IST

