Last Updated:
இங்கிலாந்து, அயர்லாந்து தொடரை இழந்ததன் மூலம் சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, அயர்லாந்து தொடரை இழந்ததன் மூலம் சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற்து. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 131 ரன்களும், கேப்டன் ஹேரி பரூக் 95 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் இஷன் கிஷன் 56 ரன்களும், திலக் வர்மா 53 ரன்களும் அடித்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டும் எடுத்து இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் 4-க்கு 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இந்திய அணியை இங்கிலாந்து அணி ஒயிட்வாஷ் செய்தது. நடப்பு டி20 சாம்பியனான இந்தியா ஏற்கனவே 2-க்கு 0 என்ற கணக்கில் அயர்லாந்து தொடரை கோட்டைவிட்ட நிலையில் தற்போது இங்கிலாந்து டி20 தொடரையும் இழந்துள்ளது. தொடர் தோல்வியால், சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்தது.


