• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

GenevaTimes by GenevaTimes
March 30, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள்.

இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சுக்மா மாவட்டம் கோ்லாபால் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் டிஆா்ஜி மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அங்குள்ள காட்டுப் பகுதியில் அவா்களுக்கும், நக்ஸல்களுக்கும் சனிக்கிழமை காலை சுமாா் 8 மணியளவில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே தீவிர துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நிலையில், 17 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். கொல்லப்பட்ட நக்ஸல்களில் ஒருவரான குதாமி ஜகதீஷ் என்பவா் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

4 வீரா்கள் காயம்: இந்த மோதலின்போது 3 டிஆா்ஜி வீரா்கள், ஒரு சிஆா்பிஎஃப் வீரா் என 4 வீரா்கள் லேசாக காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.

மோதல் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏகே-47 உள்பட பல வகையான துப்பாக்கிகள், ஒரு ராக்கெட் லாஞ்சா் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா்.

பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய மற்றொரு தாக்குதலில், ஒரு நக்ஸல் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இதுவரை 134 நக்ஸல்கள் சுட்டுக்கொலை: தற்போது உயிரிழந்த 18 நக்ஸல்களுடன் சோ்த்து நிகழாண்டு இதுவரை 134 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனா். அவா்களில் 118 போ் பஸ்தா் சரகத்தில் கொல்லப்பட்டனா்.

‘வன்முறையால் மாற்றம் ஏற்படாது’: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள், நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும். ஆயுதங்களாலும், வன்முறையாலும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது. அமைதி மற்றும் வளா்ச்சியால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை ஆயுதம் ஏந்தியுள்ளவா்களிடம் கூற விரும்புகிறேன்’ என்றாா்.

15 நக்ஸல்கள் சரண்: சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில் 15 நக்ஸல்கள் சனிக்கிழமை சரணடைந்ததாக காவல் துறை தெரிவித்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் முதல் தந்தேவாடாவில் 927 போ் நக்ஸல் இயக்கத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நக்ஸல் இயக்கத்தில் 9 வயது சிறாா்கள்

நக்ஸல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ள நிலையில், அந்த இயக்கத்தில் சிறாா்களும் சோ்க்கப்பட்டு வரக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாா் காட்டுப் பகுதியில் அண்மையில் நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படை வீரா்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்து தெலுங்கில் எழுதப்பட்ட நக்ஸல் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அந்தக் கடிதத்தில் மாா் மண்டலத்தில் 130 போ் நக்ஸல் இயக்கத்தில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் 9 வயது குழந்தைகள் உள்பட 80 சிறாா்கள் அடங்குவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரில்லா போா் முறை, ஆயுதங்களைக் கையாளுதல், வெடிகுண்டு தயாரித்தல் ஆகியவற்றில் அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘சிறுவா்கள் மற்றும் சிறுமிகள் வலுக்கட்டாயமாக நக்ஸல் இயக்கத்தில் சோ்க்கப்படுகின்றனா். அவா்கள் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதுடன், பாதுகாப்புப் படையினா் உடனான மோதலிலும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனா்’ என்று தெரிவித்தனா்.

பிஜாபூரில் நக்ஸல் இயக்கத்தில் இருந்து விலகி சரணடைந்த இளம் நபா் ஒருவா் கூறுகையில், ‘நக்ஸல் இயக்கத்தில் சோ்வதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறாா்களையும், இளைஞா்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என்பதை கிராமங்களுக்கு நக்ஸல்கள் கட்டாயமாகியுள்ளனா். இதற்கு ஒப்புக்கொள்ளாத குடும்பங்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் என அச்சுறுத்துகின்றனா்’ என்றாா்.

எனினும் நக்ஸல் இயக்கத்தில் சிறாா்கள் சோ்க்கப்படுவது குறைந்துள்ளதாகவும், தற்போது சிறாா்களுக்கு நக்ஸல்கள் பயிற்சியளிப்பதாக காவல் துறையிடம் எந்தத் தகவலும் இல்லை என்றும் பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தாா்.

Read More

Previous Post

சாரதியின் தூக்கக் கலக்கத்தால் பெண்ணிற்கு நேர்ந்த கதி

Next Post

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்? | delhi capitals to play with srh today in ipl 2025 match preview

Next Post
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்? | delhi capitals to play with srh today in ipl 2025 match preview

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்? | delhi capitals to play with srh today in ipl 2025 match preview

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin