• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாழ்க்கையில் பல விஷயங்கள் வரும், போகும். பெறுவதும், இழப்பதும் இயற்கையானது. ஆனால் நாம் நியாயமான முறையில் தேடிய செல்வங்கள், பதவி, சொத்துக்கள் போன்றவற்றை சிலர் தந்திரமாக ஏமாற்றி இருப்பார்கள். சிலர் சதி செய்து நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை தட்டி பறித்திருக்கலாம். இப்படி பெயர், புகழ், செல்வம் என அனைத்தையும் இழந்திருந்தாலும் கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாக பலரும் நம்பி வழிபடும் தெய்வமாக இருக்கும் முருகப் பெருமானின் ஒரே ஒரு மந்திரத்தை சொல்லி வழிபட்டால் இழந்த அனைத்தும் நமக்கு மீண்டும் கிடைக்கும்.

அனைத்து தெய்வங்களுக்கும் எத்தனையோ மந்திரங்கள் உள்ளன. இருந்தாலும் சித்தர்கள் இயற்றிய மந்திரத்திற்கும், முருகப் பெருமானின் அருளுடன் அவரது கட்டளைப்படி இயற்றப்பட்ட மந்திரங்கள் மற்றும் பாடல் வரிகளுக்கு சக்தி அதிகம். காரணம், அந்த மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்திலும் முருகப் பெருமானின் அருள் நிறைந்திருப்பதாக ஐதீகம். இந்த மந்திரங்களை சஷ்டி விரதம் , கிருத்திகை அல்லது செவ்வாய்கிழமைகளில் சொல்லுவது மிகவும் விசேஷமானதாகும்.

அப்படி சித்தர்களில் ஒருவராகவும், முனிவர்களில் தலைமையானவருமாக போற்றப்படும் அகத்தியரால் அருளப்பட்ட முருகன் மந்திரத்தை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம். முருகப் பெருமானுக்காக அவர் இயற்றிய இந்த மந்திரத்தை தினத்தை சொல்லி வந்தால் வாழ்க்கையில் இழந்த அனைத்தையும் திரும்ப பெற செய்யும். இந்த மந்திரத்தை சொல்வதற்கு, நேரம், இடம் என எதுவும் முக்கியம் கிடையாது. மனமும், உடலும் சுத்தமாக இருந்தால் எந்த இடத்திலும் இருந்த படியே எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை தினமும் சொல்லி வரலாம். இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல நமக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வேலும், மயிலும் துணையாக இருந்து எப்போதும் நம்மை காக்கும்.

முருகப் பெருமானுக்குரிய முக்கிய தலங்களாக அறுபடை வீடுகள் சொல்லப்படுகிறது. ஆனால் ஆறுபடை வீடுகளில் சென்று வழிபட்ட பலனை தரக் கூடிய தலம் திருச்செந்தூர். இங்கு சென்று வழிபட்டால் பணம், பெயர், புகழ் என அனைத்தும் கிடைக்கும். முருகப் பெருமான் , சூரனை வதம் செய்து வெற்றி கொண்ட தலம் என்பதால் இதற்கு ஜெயந்திபுரம் என்றொரு பெயர் உண்டு. ஜெயந்தி என்றால் வெற்றி என்று பொருள். நம்முடைய வாழ்க்கையிலும் அனைத்திலும் வெற்றி கிடைத்து, உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் திருச்செந்தூர் ஆண்டவரை வழிபடுவது சிறப்பு. திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை மனதார வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் அற்புதமான மாற்றங்கள், அதிசயங்கள் வாழ்வில் நடப்பதை காண முடியும்.

முருகன் மந்திரம் :

“ஓம் முருகா குரு முருகா அருள் முருகா
ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே
சண்முகனே சடாஷ்சரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாகா”

The post சக்தி வாய்ந்த முருகன் மந்திரம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

கயானா, டோமினிகா, பார்படோஸ் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது | Prime Minister Narendra Modi honoured by Dominica

Next Post

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

Next Post
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin