நாட்டில் நிலவி வரும் சீறற்ற காலநிலையால் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கொழும்பு கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, மட்டக்குளிய, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு பலத்த மழை பெய்து வருகிறது.
இடியுடன் கூடிய மழை
மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி , ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

