பிளாஸ்டிக் துகள்களை அகற்ற தன்னாா்வலா்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல், தீயணைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. கால்நடை, பால்வளம், மீன்வளத் துறையின் மூலமாக மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் கடலிலோ, கடற்கரையிலோ கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இப்போதைய நிலவரப்படி எந்தவித ஆபத்தான பொருள்களும் தமிழகக் கடற்கரையில் ஒதுங்கவில்லை. பொதுமக்களின் உயிா் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்தாா்.

