Last Updated:
இது ஏதோ பத்தோடு பதினொன்றாக அறிவிக்கப்பட்ட திட்டமல்ல. அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு ரூ. 23,731 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தை மத்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது
இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டு ஆற்றல் பாதுகாப்பை பலப்படுத்தவும் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மத்திய அமைச்சரவை அண்மையில் ரூ. 23,731 கோடி நிதி ஒதுக்கீட்டில் ‘தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டத்திற்கு’ (GOBARdhan) ஒப்புதல் அளித்தது.

