யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள்
அகழ்வாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்
முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய (19) அகழ்வாய்வின் போது அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு உட்பட 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446
மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 434
மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டுள்ளது
மேலும், இன்று 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த
நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற
2ஆம் கட்ட அகழ்வாய்விலும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித
எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வில் கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில்
புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது
சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

