கடந்த ஜூன் 18ஆம் தேதி காணாமல் போன ராணுவ வீரர் 19 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டார். எல்லை ராணுவப் படையின் 7ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த இவர் மலேசிய- புருணை லிம்பாங் எனும் இடத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல்போனார். வரைபடம், நிலத்தை அளக்கும் துறையுடன் இவர் எல்லைப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் இவர் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டிருந்தது.
ராணுவ வீரரான முகமட் ஷஃபிக் ஹில்மி அப்துல் ஹலிம் பாதுகாப்பாக கண்டுடிபிக்கப்பட்டார் என்று தரைப்படையின் கிழக்கு வாட்டார முகாம் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்த ராணுவ வீரர் பாலிங் கெடாவைச் சேர்ந்தவர். உடல் பலவீனமான நிலையில் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.


