தென்கொரியாவில் ரோபோ ஒன்று வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கிறது. குமி நகரத்துடைய நகரச் சபை அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, இந்த ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ரோபோவுக்குத் தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாகக் கொண்ட இந்த ரோபோ, அலுவலகம் வரும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து தினசரி ஆவணங்களைப் பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவது போன்ற பணிகளைச் செய்து வந்திருக்கிறது.

