மட்டக்களப்பு, களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது.
அதிகாலையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்து, பின்னர் அதனைக் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு, இளம் நீலக் கலரில் கூம்பக வடிவில் காணப்படும் இப்பொருளின் அடியில் 12 LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.
மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு, டயர்களும் உள்ள நிலையில், இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு அறிவித்துள்ளதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

