( ரெ.மாலினி)
மலாக்கா:
கடந்த மாதம் இரத்தம் முழுவதும் மூழ்கிய நிலையில் மலாக்கா மருத்துவமனைக்கு வந்த இளம் பெண் தொடர்பான சம்பவம், ஐந்து மாத கர்ப்பத்தை கலைக்க முயன்றதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த 18 வயது இளம்பெண் செய்த செயலை மருத்துவமனை மருத்துவர்கள் போலீசில் புகார் செய்ததன் மூலம் இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது என மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஏப்ரல் 25 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் பதிவாகியுள்ளது.
விசாரணையில், அந்த இளம்பெண் சுமார் 22 வார கர்ப்பத்தை கருக்கலைப்பதற்காக மாத்திரைகள் எடுத்ததாக நம்பப்படுகிறது. இதனால் முழுமையாக கரு வெளியேறாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், உயிரிழந்த நிலையில் பிறந்த கருவை,( placenta) அவளது 18 வயது காதலன் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
சந்தேக நபரான அந்த ஆடவர், அதை வீட்டின் பின்புறத்தில் புதைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன் அந்தக் கருவை தனது வீட்டில் இருந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்றின் உள்ளே மறைத்து வைத்திருந்தார், என சுல்கைரி அவர் கூறினார்.




