அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக, மகிந்த ராஜபக்ச கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.
இது தெடார்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
தமிழ்,சிங்கள சமுகத்தை ஒன்றாக வாழவைக்க முயற்சிக்கிறார்
அர்ஜுனா எம்.பி. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவித்தால், அது அவருக்கே நல்லதல்ல. ஏனென்றால், அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக சதி செய்ய மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். அது இங்கு எங்களுக்கு முன் அவருக்கே நல்லதல்ல.

ஆகவே, அந்த மேடையில் இருந்த ஒருவராக, அர்ஜுனாவின் உரை முழுவதும் அவர் வடக்கையும் தெற்கையும் இணைக்க ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்வதையே நான் கண்டேன். ஆகவே, தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சகோதரர்களைப் போல வாழ வைக்க, அல்லது இணைந்து வாழ முயற்சிக்கிறார்.
இப்போது இது சமஷ்டி கேட்பவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? இந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? ஆனால் அர்ஜுனாவின் வரலாற்றைப் பார்த்தால், அர்ஜுனா நாடாளுமன்றத்தில் பேசியவற்றைப் பார்த்தால், அர்ஜுனா ஏன் திடீரென இந்த நிலைக்கு மாறினார்?
மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச
மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச. வேறு யாருமில்லை. அவர்தான் அர்ஜுனாவை மாற்றினார்.
அவரது தந்தையார்தான் பிள்ளையானை மாற்றினார். அவரது தந்தையார்தான் கருணாவை மாற்றினார். அவர்களை மாற்றி நாட்டின் அரசியலுக்குள் கொண்டுவந்து, அவர்கள் மூலம் அந்த மக்களுக்கு அந்தந்த கிராமப் பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பளித்தார்.

கிழக்கு எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை நாம் கண்டோம். ஆனால் கிழக்கிலிருந்து கருணா ஒருபோதும் சமஷ்டியைக் கேட்கவில்லை; அல்லது நாட்டைப் பிரித்து கிழக்கு மாகாணத்தை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பிள்ளையான் கேட்கவில்லை. இப்போது அர்ஜுனாவும் வடக்கை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்காத நிலைக்கு நாமல் ராஜபக்ச கொண்டுவந்திருப்பது ஒரு வெற்றியல்லவா?
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

