இனி கனடா தேவையில்லை – ட்ரம்ப்
கனடாவிற்கு என்னென்ன வரிகள் என்பதை ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அது…
“கனடா பல ஆண்டுகளாகவே அமெரிக்காவைச் சுரண்டி வருகிறது. அமெரிக்க விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருள்கள் மீது கனடா விதித்துள்ள அதிகப்படியான வரிகள், அமெரிக்கர்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக 60 பில்லியன் டாலர் பற்றாக்குறையையும் உருவாக்கியுள்ளது.
இது இனிமேலும் நீடிக்க முடியாது, இனி அப்படி நடக்காது! 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், அனைத்து கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீதான வரிகள் 50% ஆக உயர்த்தப்படும்.
அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால், கனடாவிற்கு ‘ஜீரோ வரி’ சலுகை கிடைக்கும். கனடா இனிமேலும் அமெரிக்காவின் ஒரு மாகாணத்தைப் போல நடத்தப்பட மாட்டாது!
அனைத்து வகையிலும் உலகிலேயே மிக மோசமான நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது. அமெரிக்காவிற்கு இனி கனடா தேவையில்லை, அவர்களுக்குத்தான் நாம் தேவை!
அவர்கள் தங்களின் 95% வர்த்தகத்தை அமெரிக்காவுடன் தான் செய்கிறார்கள், ஆனால் நமக்கு அப்படி அல்ல!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, ட்ரம்பின் இந்த வரி ஓரளவு சாதகமாக இருக்கலாம். காரணம், கனடா உடனான வர்த்தகத்தில் அமெரிக்காவிற்குப் பற்றாக்குறை உள்ளது.

