Last Updated:
Computer Based Neet Reexamination : உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. சுதாகர் சிங், நீட் மறுதேர்வை கணினி வழியில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நீட் மறுதேர்வை கணினி வழியில் நடத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், தேர்வை ரத்து செய்த தேசிய தேர்வு முகமை, வரும் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவித்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. சுதாகர் சிங், நீட் மறுதேர்வை கணினி வழியில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு, ஏற்கனவே தேசிய தேர்வு முகமை கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், இதே போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி பிற கோரிக்கைகள் குறித்த விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, கடந்த 29ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, மீண்டும் மீண்டும் நடைபெறும் தேர்வு முறைகேடுகளால் மாணவர்களும், பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என கவலை தெரிவித்திருந்தது
மேலும் தவறு செய்வோர் பொறுப்பாக்கப்பட வேண்டும் எனவும், தேசிய தேர்வு முகமையில் உடனடியாகக் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.


