Last Updated:
மெக்சிகோ நாட்டின் சுற்றுலாத் தலமான குவின்டானா ரோ (Quintana Roo) கடற்கரைப் பகுதிகளில், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாக சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் டன் சர்காசம் பாசிகள் கரையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்சிகோ நாட்டின் புகழ்பெற்ற கரீபியன் கடற்கரைகளை அச்சுறுத்தி வரும் ‘சர்காசம்’ எனப்படும் பழுப்பு நிறக் கடற்பாசியைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அவசரகாலத் திட்டத்தை அறிவித்துள்ளது.
சர்காசம் (Sargassum) என்பது கடலில் மிதந்து வளரும் ஒரு வகை பழுப்பு நிற பாசி (Seaweed) வகையாகும். கடல் பகுதிகளில் பெருமளவில் உருவாகி, பெரிய தீவுகள் போல கடலில் மிதந்து திரியும் தன்மை கொண்ட இந்த பாசி, அதிக அளவில் கரை ஒதுங்கும் போது கடற்கரைகள் மாசுபடுவதோடு, மீன்வளத்தையும் சுற்றுலாத்துறையையும் கடுமையாகப் பாதிக்கின்றன. மெக்சிகோ நாட்டின் சுற்றுலாத் தலமான குவின்டானா ரோ (Quintana Roo) கடற்கரைப் பகுதிகளில், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாக சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் டன் சர்காசம் பாசிகள் கரையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தடுக்கும் பொருட்டு, அதிநவீன தடுப்புச் சுவர்கள், பாசிகளைச் சேகரிக்கும் படகுகள் மற்றும் ட்ரோன்கள் கடலில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கரை சேரும் முன்பே, கடலிலேயே பாசிகளை முற்றிலும் அகற்றும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடலை ஆக்கிரமிக்கும் ‘சர்காசம்’ கடற்பாசி… ரூ.200 கோடி செலவில் அவசர நடவடிக்கையில் இறங்கிய மெக்சிகோ அரசு!


