Last Updated:
2026 ஓணம் பண்டிகைக்கு 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 16 முதல் 26 வரை ஓணம் கொண்டாடப்படுகிறது.
2026 ஓணம் பண்டிகைக்காக 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கேரளா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது பயணம் செய்யும் பயணிகளின் நலனுக்காக, ரயில்வே அமைச்சகம் விரைவில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் சேவைகளை அறிவிக்கும் என்று தெரிவித்தார். கேரள மக்கள் தங்கள் சொந்த ஊரை சென்றடைவதற்கான பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அமைச்சகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என அமைச்சர் கூறினார்.
2026-ல், பத்து நாள் ஓணம் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி, திருவோணம் எனும் புனித நாளில் (புதன்கிழமை, ஆகஸ்ட் 26, 2026) நிறைவடைகின்றன. மாதம் முழுவதும் கொண்டாட்டங்களும் சுற்றுலா தளங்களில் அதிக பொதுமக்கள் கூடுவார்கள் அதன்படி, பயணிகளின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஓணம் பண்டிகைக் காலம் முழுவதும் சிறப்பு ரயில் சேவைகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2026 ஓணம் பண்டிகையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இயக்கப்பட்ட ரயில் சேவைகளை விட கணிசமாக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. கேரளாவின் மிக முக்கியமான பண்டிகைக் காலங்களில் ஒன்றான ஓணத்தின்போது, பயணிகளுக்குப் பாதுகாப்பான, வசதியான மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்குவதில் ரயில்வே அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கேரளாவில் ரயில்வே வலையமைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இது இணக்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
“ஓணம் பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்..” மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!


