Last Updated:
தேஜ் பிரதாப்புக்கும், பிகார் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராய் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
மூத்த மகன் தேஜ் பிரதாபை, கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
பிகார் முன்னாள் அமைச்சரும், லாலு பிரசாத்தின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் 12 ஆண்டுகளாக தொடர்பில் இருப்பதாகக் கூறி, இருவரும் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.
தேஜ் பிரதாப்புக்கும், பிகார் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராய் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத், தேஜ் பிரதாப்பின் நடவடிக்கைகள் குடும்ப மரபுகளுக்கு ஏற்றதாக இல்லாததாலும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதாலும், அவரை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் வேறுபட்டவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லாலு பிரசாத்தின் மகனும், முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தேஜ் பிரதாப்பின் வரம்பு மீறிய செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
May 26, 2025 10:36 AM IST


