ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டு ஓக்டோபர் 11 ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த அவரது பதவிக்காலம், மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவுள்ளது.
இரண்டாவது பதவிக்காலத்திற்கான இந்த வாக்கெடுப்பில் அவர் 134 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்த்த நாடுகள்
இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 144 ஐ.நா. உறுப்பு நாடுகள் வாக்களித்த நிலையில், 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. மேலும் 13 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் வடகொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் வோல்கர் டர்க்கின் மறுதேர்தலை எதிர்த்திருந்தன.
இரண்டு பதவிக்காலங்கள்
வோல்கர் டர்க் தனது இரண்டாவது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தால், 1993 ஆம் ஆண்டு இப்பதவி உருவாக்கப்பட்டதற்குப் பிறகு இரண்டு பதவிக்காலங்களை முழுமையாக நிறைவு செய்யும் முதல் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற பெருமையைப் பெறுவார்.

காசா முனை மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்த ஒருவராக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

