Last Updated:
தற்போது இந்த கொடூர வெப்ப அலை கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சூறையாடி வருகிறது. இத்தாலியின் ரோம், மிலன் உட்பட 18 நகரங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை உலுக்கி வரும் மிக மோசமான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன.
வழக்கமாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரான்சில் ஒரு நாளைக்கு 1,000 மரணங்கள் வரை பதிவாகும். ஆனால், இந்த வெப்ப அலையின் உச்சக்கட்டமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தினசரி மரணங்களின் எண்ணிக்கை 1,400-ஐத் தாண்டியுள்ளது. வெப்ப அலையினால் உயிரிழந்தவர்களில் 85% பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என கூறப்படுகிறது.
தற்போதைய தரவுகள் டிஜிட்டல் சான்றிதழ்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்பதால், உண்மையான மரண எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்குக் கூடுதலாக ஏசி மற்றும் விசிறிகளை கொள்முதல் செய்ய, பிரான்ஸ் அரசு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
பிரான்சின் பல பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததைத் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், பிரான்சின் வடகிழக்கு பகுதிகளுக்கு இன்னும் வெப்பத்திற்கான ஆரஞ்சு அலர்ட் நீடிக்கிறது. தற்போது இந்த கொடூர வெப்ப அலை கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சூறையாடி வருகிறது. இத்தாலியின் ரோம், மிலன் உட்பட 18 நகரங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் கொடூர வெப்ப அலை.. பிரான்சில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி – இத்தாலியில் 18 நகரங்களுக்கு ரெட் அலர்ட்


