“எண்ணெய் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒரு நாடு என்ற வகையில், அன்றாட வாழ்க்கையை முடிந்தவரை தடையின்றி கொண்டு செல்வதற்காகவே இந்த முறைமையை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாததால், எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமையை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (25) ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிக்க QR முறைமை தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
அத்துடன், எரிபொருள் நுகர்வு குறைந்துள்ள போதிலும், அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலவும் ஸ்திரமற்ற நிலை உலகளாவிய எண்ணெய் விலையை தொடர்ந்து பாதித்து வருவதோடு, ஒரு பேரல் எண்ணெயின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது என்று அமைச்சர் ஷமேலும் விளக்கினார்.
“எண்ணெய் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒரு நாடு என்ற வகையில், அன்றாட வாழ்க்கையை முடிந்தவரை தடையின்றி கொண்டு செல்வதற்காகவே இந்த முறைமையை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து டீசல் நுகர்வு 10 சதவீதத்தாலும், பெட்ரோல் நுகர்வு 9 சதவீதத்தாலும் குறைந்துள்ளது. தற்போது அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த QR முறைமையை மேலும் சில காலத்துக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

