Last Updated:
‘ஹைப்பர்சோனிக் கிளைடு’ மற்றும் ‘ஹைப்பர்சோனிக் குரூஸ்’ ஆகிய இரண்டு வகை ஏவுகணைகளையும் இந்தியா உருவாக்கி வருகிறது
இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ‘அக்னி-6’ (Agni-VI) ஏவுகணைத் திட்டத்திற்குத் தாங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய டிஆர்டிஓ தலைவர் சமீர் வி. காமத், அக்னி-6 ஏவுகணைத் திட்டத்தைத் தொடங்குவதற்கான தொழில்நுட்பம் தயார் நிலையில் விஞ்ஞானிகள் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்த இறுதி முடிவு மத்திய அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது என்றும், அரசாங்கம் அனுமதி வழங்கியவுடன் இதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தற்போதுள்ள அக்னி வரிசை ஏவுகணைகளை விட, அக்னி-6 நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதாக இந்த ஏவுகணை அமையும்.
ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ‘ஹைப்பர்சோனிக் கிளைடு’ மற்றும் ‘ஹைப்பர்சோனிக் குரூஸ்’ ஆகிய இரண்டு வகை ஏவுகணைகளையும் இந்தியா உருவாக்கி வருகிறது. இதில் ‘ஹைப்பர்சோனிக் கிளைடு’ ரக ஏவுகணைகள் மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும், இதற்கான முதற்கட்ட சோதனைகள் மிக விரைவில் நடத்தப்படும் என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிரிகளின் தூக்கத்தை தொலைக்க வரும் ‘அக்னி-6’… நீண்ட தூர இலக்குகளைத் தாக்க தயாராகும் இந்தியன் ஆர்மி


