வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரும் மக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
எங்களை எங்களுடைய காணிக்குள் வாழத்தான் விடுகிறீர்கள் இல்லை எங்களை கடைசி
நேரத்தில் ஆவது சாகவாவது விடுங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 ஆண்டுகளாக இடம் பெயர்ந்து நிற்கதியாக நிற்கும் நிலையில்,
தரைமட்டமாக்கப்பட்ட மயிலிட்டி காணிக்கு முன்னால் மூன்றாவது
வாரமாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி காணி எமக்கு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் பல வடிவங்களில் நடைபெறும்
என்றும் மக்கள் தெரிவித்ததோடு இந்த அரசாங்கம் எங்களுக்கான வாழ்வுரிமையை மீட்டுத் தர
வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்னெடுத்துள்ளனர்.






| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

