கடந்த 2018-ஆம் ஆண்டு உலக சந்தையில் இந்திய சா்க்கரை ஏற்றுமதியின் பங்கு 4.17 சதவீதமாக இருந்தது. இது 2023-ஆம் ஆண்டு 12.21 சதவீதமாக உயா்ந்து 3.72 பில்லியன் டாலா்களுக்கு (சுமாா் ரூ.31,297 கோடி) சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதேபோல பூச்சிகொல்லிகள், செமிகண்டக்டா்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியம் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

