Last Updated:
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஆடவர் என்ற புதிய சாதனை படைத்தார் அர்ஜெண்டின கேப்டன் லியோனல் மெஸ்ஸி, மிரோஸ்லாவ் குளோஸை முந்தினார்
அர்ஜெண்டின கேப்டன் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
கால்பந்து உலகில் பல எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி முடிசூடா மன்னனாக வலம் வருபவர் மெஸ்ஸி. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அல்ஜீரியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல்களை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதன் மூலம், 16 கோல்களுடன் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவராக வலம் வந்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.
இந்நிலையில் ஆஸ்திரிய அணிக்கு எதிரான தற்போதைய போட்டியில் களம் கண்ட அவர், அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து மிரட்டி தனது கோல் எண்ணிக்கையை 18ஆக உயர்த்தினார். இதன் மூலம், ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற புதிய மைல்கல்லை மெஸ்ஸி தற்போது தொட்டுள்ளார்.
தனது 18 வயது முதல் உலகக் கோப்பையில் விளையாடிவரும் மெஸ்ஸி தற்போது 6ஆவது முறையாக உலகக் கோப்பையில் களம் கண்டுள்ளார். 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற தொடரில் மட்டும் அதிகபட்சமாக 7 கோல்களை அவர் அடித்திருந்தார். தற்போது முதல் இரு போட்டிகளிலேயே 5 கோல்களை மெஸ்ஸி அடித்து நொறுக்கியுள்ளதால், தனது முந்தைய சாதனையை இதில் தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


