Last Updated:
17வது நாளான மௌனி அமாவாசை புனித திருநாளை முன்னிட்டு அமிர்த ஸ்நானம் எடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
உத்திரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ம் 30க்கும் அதிகமானவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் சிலர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளா தொடங்கியது.
தொடர்ந்து இந்த கும்பமேளா 45 நாட்கள் நடைபெறும். அப்போது அங்குள்ள திருவேணி சங்கமத்தில் கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடுவார்கள். இந்நிலையில் 17வது நாளான மௌனி அமாவாசை புனித திருநாளான இன்று அமிர்த ஸ்நானம் எடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர அசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் பெரிய அளவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 30க்கும் அதிகமானவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க – உ.பி-யில் மேடை இடிந்து விழுந்து 7 பேர் பலி… 40-க்கும் மேற்பட்டவர்கள் காயம்
காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்று கூறப்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெரிசலை தொடர்ந்து காலை 10 மணி வரையில் புனித நீராடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு காலை 10 மணிக்குள்ளாக மட்டும் 3.61 கோடி பக்தர்கள் புனித நீராடியதாக அரசு தெரிவித்துள்ளது.
January 29, 2025 10:44 AM IST


