ஈரான் உளவுத்துறைக்கும், இவருக்கும் இடையே 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை நேரடித் தொடர்பு இருந்ததைத் தொலைபேசி ஆவணங்கள் உறுதி செய்துள்ளன.
2020-ம் ஆண்டில் ஷமிமின் தந்தைவழிச் சொத்துக்களை ஈரான் அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அந்தச் சொத்துக்களை மீட்க வேண்டுமானால், அமெரிக்காவில் ஒரு நிறுவனம் தொடங்கி ஈரான் அரசுக்கு உளவு வேலை பார்க்க வேண்டும் என ஈரான் உளவுத்துறை இவரை ‘அசைன்மென்ட்’ கொடுத்து அனுப்பியதாகத் தெரிகிறது.
அதற்கு ஷமிமும், “ஈரானுக்கு உள்ளேயே இருப்பதைவிட, வெளியில் இருந்து உங்களுக்கு வேலை செய்வதுதான் பயனுள்ளதாகஇருக்கும்” என சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ஒருபுறம் இந்த அதிரடி கைது அரங்கேற, மறுபுறம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுவருகிறது.
மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் பாகிஸ்தான் செல்லவிருக்கும் சூழலில், இந்த ஆயுதக் கடத்தல் விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது.
கடத்தல் குறித்து கேட்கும்போது ஷமிம், ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என மறுத்து வருகிறார். ஆனால், அமெரிக்க உளவுத்துறை கையில் இருக்கும் ஆதாரங்களோ இவரை விடாமல் துரத்துகின்றன.

