அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வளைகுடா நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வாய்ப்பு
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல நாடுகள் தன்னிடம் தொடர்பு கொண்டு ஈரானுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டதுடன், இதுவே இறுதி வாய்ப்பு என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

Image Credit:
Al Jazeera
ஏற்கனவே பலமுறை தாக்குதல்களைத் தள்ளிவைத்த நிலையில் இந்த முறை என்ன வித்தியாசம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இறுதி நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கிவிட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை திறப்பு
இதேவேளை, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், ஒப்பந்தத்தின் முதல் கட்டமாகச் செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பல மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவரது நிர்வாகம் சவால்களை எதிர்கொண்டு வந்தபோதிலும், இந்த விவகாரம் அவ்வளவு சிக்கலானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

