Last Updated:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே செவிலியரை வீடு புகுந்து கழுத்தை நெரித்துக் கொன்று, பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சைக்கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் சனாலுல்லா என்பவர் பிழைப்பிற்காக குடும்பத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத் வந்துள்ளார். பல இடங்களில் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்த அவர் மூன்று மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள பகாடி ஷரீஃப் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெக்கானிக் ஷாப் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலை செய்து வந்த சனாலுல்லா, 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை இன்டர்நெட் மூலம் செல்போனில் தரவிறக்கம் செய்து அவற்றைத் தினமும் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


